Loading..
வானத்தையும், பூமியையும், காணப்படுகிறதும், காணப்படாததுமான, எல்லாவற்றையும் படைத்தவரா யிருக்கிற, சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய, ஒரே கடவுளை விசுவாசிக்கிறேன்.
ஒரே கர்த்தருமாய், கடவுளுடைய ஒரே பேறான குமாரனுமாயிருக்கிற, இயேசு விசுவாசிக்கிறேன். அவர் சகல கிறிஸ்துவையும் உலகங்களும் உண்டாவதற்கு முன்னே, தமது பிதாவினாலே ஜெநிப்பிக்கப்பட்டவர், தெய்வத்தில் தெய்வமானவர், ஜோதியில் ஜோதியானவர். மெய்தேவனில் மெய் தேவனானவர், உண்டாக்கப்படாமல் ஜெநிப்பிக்கப்பட்டவர்; பிதாவோடே ஒரே தன்மையுடையவர்; சகலத்தையும் உண்டாக்கினவர், மனிதராகிய நமக்காகவும், நமக்கு இரட்சிப்பு உண்டாகவும், பரமண்டலத்திலிருந்து இறங்கி பரிசுத்த ஆவியினாலே, கன்னி மரியாளிடத்தில் அவதரித்து மனுஷனானார். நமக்காகப் பொந்தியு பிலாத்துவின் காலத்தில் சிலுவையில் அறையுண்டு, பாடுபட்டு அடக்கம் பண்ணப்பட்டார். வேதவாக்கியங் களின்படி, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். பரமண்டலத்துக்கேறி பிதாவின்
வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்; உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க மகிமையோடே திரும்ப வருவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவில்லை.
கர்த்தருமாய், ஜீவனைக் கொடுக்கிறவருமாய், பிதாவிலும் குமாரனிலும் நின்று புறப்படுகிறவருமாய், பிதாவோடும் குமாரனோடும் கூடத்தொழுது ஸ்தோத்திரிக்கப்படுகிறவருமாய் தீர்க்கதரிசிகள் மூலமாக உரைத்தவருமாயிருக்கிற பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்கிறேன். ஒரே பரிசுத்த பொதுவான திருச்சபை உண்டென்று விசுவாசிக்கிறேன்.பாவமன்னிப்புக்கென்று நியமிக்கப்பட்ட ஞானஸ்நானத்தை அறிக்கையிடுகிறேன். மரித்தோர் உயிர்த்தெழுதலும், மறுமைக்குரிய ஜீவனும் உண்டாகும் என்று காத்திருக்கிறேன். ஆமென்.
We deliver orders within 2-4 hours. In case of rain, there may be a slight delay in delivery. Orders placed after 6 PM will be delivered the next day. Please verify the items upon delivery. We do not offer refunds or replacements for grocery items.