Loading..
திருவிருந்து தொழுகை - பரிசுத்த நற்கருணை ஆராதனை
Holy Communion in Tamil
கீதம்:
(திருப்பணிவிடையாளர் திருவிருந்து மேஜையண்டை வரும்போது சபையார் நிற்கவேண்டும். தொழுகையில் உபயோகிக்கப்படும் வேதாகமத்தைக் குருவாகிலும் அவருடன் இருப்பவரில் ஒருவராகிலும் தம் இரு கைகளாலும் ஏந்திவந்து திருமேசையிலாவது வாசிப்புப் பீடத்திலாவது வைக்கவேண்டும்.)
(குரு ஜனங்கள் முகமாய்த் திருமேசைக்குப்பின் நின்று சொல்லுவது)
நின்றவாறே வேண்டுதல் செய்வோமாக
எல்லா இருதயங்களையும், எல்லா விருப்பங்களையும், எல்லா இரகசியங்களையும் அறிந்திருக்கிற சர்வ வல்லமையுள்ள கடவுளே, நாங்கள் தேவரீரிடத்தில் பரிபூரணமாய் அன்புகூரவும், உமது பரிசுத்த நாமத்தை உத்தமமாய் மகிமைப்படுத்தவும், உமது பரிசுத்த ஆவியின் ஏவுதலால் எங்கள் இருதயத்தின் சிந்தனைகளைச் சுத்தம் பண்ணியருள எங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.
(பின் எல்லாரும் சேர்ந்து பாட அல்லது சொல்லவேண்டியது)
உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக. கர்த்தராகிய பராபரனே, பரம ராஜாவே, சர்வத்துக்கும் வல்ல பிதாவாகிய கடவுளே உம்மைத் துதிக்கிறோம், உம்மைப் புகழுகிறோம், உம்மை வணங்குகிறோம், உம்மை மகிமைப் படுத்துகிறோம், உமது சிறந்த மகிமையினிமித்தம் உமக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறோம்.
ஆண்டவராயிருக்கிற ஒரே பேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவே, கர்த்தராகிய பராபரனே, பிதாவின் சுதனே, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியே, எங்களுக்கு இரங்கும்.
We deliver orders within 2-4 hours. In case of rain, there may be a slight delay in delivery. Orders placed after 6 PM will be delivered the next day. Please verify the items upon delivery. We do not offer refunds or replacements for grocery items.