Loading..
அப்பம் பிட்குதல்
எல்லோரும் எழுந்து நிற்க, குரு சொல்லுவது
:
இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எவ்வளவு நன்மையும், எவ்வளவு இன்பமுமானது. (சங். 133:1)
அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்குபெறுகிறபடியால், அநேகரான நாம் ஒரே அப்பமும், ஒரே சரீரமுமாயிருக்கிறோம். (1.கொரி . 10:17)
நான் அவருடைய கூடாரத்திலே ஆனந்த பலிகளையிட்டு ஆண்டவரைப் பாடி அவரைக் கீர்த்தனம் பண்ணுவேன். (சங். 27:6)
சமாதான வாழ்த்து இங்கே கொடுக்கலாம்.
(ஒரு கீதம் பாடப்படும், அப்பொழுது சபையாருடைய காணிக்கைகளுடன் பரிசுத்த நற்கருணைக்கு வேண்டிய அப்பமும் திராட்சரசமும் முன்னால் கொண்டுவரப்பட்டுத் திருமேஜையில் வைக்கப்படும். கொண்டுவருபவர்கள் பின்வரும் ஜெபம் சொல்லப்படுகையில் திருமேஜையின்முன் நிற்பார்கள்).
எல்லோரும் இன்னும் நின்றுகொண்டிருக்க, குரு சொல்லுவது :
பரிசுத்த பிதாவே, உமது கிருபாசனத்தண்டையில் பிரவேசிப்பதற்குப் புதிதும், ஜீவனுமான வழியை உமது அருமையான குமாரனின் இரத்தத்தினால் எங்களுக்கு உண்டுபண்ணினீரே; நாங்கள் அபாத்திரராயினும் அவர் மூலமாக உம்மண்டை வருகிறோம். எங்களையும், இந்தக் காணிக்கைகளையும் உம்முடைய நாம மகிமைக்காக அங்கீகரித்து உபயோகிக்கும்படியாக, தாழ்மையோடு வேண்டிக்கொள்கிறோம். வானத்திலும், பூமியிலும் உள்ளவைகள் எல்லாம் உம்முடையவைகள். உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுக்கிறோம். ஆமென்.
We deliver orders within 2-4 hours. In case of rain, there may be a slight delay in delivery. Orders placed after 6 PM will be delivered the next day. Please verify the items upon delivery. We do not offer refunds or replacements for grocery items.