Loading..
ஜெபம் செய்வோமாக
குருவும், ஜனங்களும் முழங்காற்படியிட்டுச் சேர்ந்து சொல்லுவது :
இயேசுவே, உத்தம பிரதான ஆசாரியரே, நீர் உமது சீஷர்கள் மத்தியில் பிரசன்னமாயிருந்ததுபோலவே எங்கள் நீரே மத்தியிலும் பிரசன்னமாகி, அப்பத்தைப் பிட்கையில், எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தியருளும். பிதாவோடும், பரிசுத்த ஆவியரோடும், ஒரே கடவுளாக ஜீவித்து அரசாளுகிறீர். ஆமென்.
(குரு இப்பொழுது எழுந்து நிற்பார்
ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
அவர் உமது ஆவியோடும் இருப்பாராக.
உங்கள் இருதயத்தை உயர்த்துங்கள்.
எங்கள் இருதயத்தை ஆண்டவரிடத்தில் உயர்த்துகிறோம்.
நம்முடைய ஆண்டவராகிய கடவுளுக்கு ஸ்தோத்திரம் செலுத்துவோமாக.
அப்படிச் செய்வது தகுதியும், நீதியுமாயிருக்கிறது.
ஆண்டவரே, பரிசுத்த பிதாவே, சர்வ வல்லமையுள்ள நித்திய கடவுளே நாங்கள் எக்காலத்திலும், எவ்விடத்திலும் உமக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறது தகுதியும் நீதியும் எங்களுக்கு விசேஷித்த கடமையுமாயிருக்கிறது.
உமது குமாரனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக நீர் வானங்களையும், பூமியையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் சிருஷ்டித்தீர். மனிதனையும் உமது சாயலாக உண்டாக்கினீர். அவன் பாவத்தில் விழுந்தபோது புது சிருஷ்டியின் முதற்பலனாக நீர் அவனை மீட்டுக்கொண்டீர்.
We deliver orders within 2-4 hours. In case of rain, there may be a slight delay in delivery. Orders placed after 6 PM will be delivered the next day. Please verify the items upon delivery. We do not offer refunds or replacements for grocery items.