Loading..
ஆண்டவரே, எங்களுக்கு இரங்கி, பிரமாணத்தைக் கைக்கொள்ள எங்கள் இருதயத்தை
ஏவியருளும்.
இச்சியாதிருப்பாயாக.
ஆண்டவரே, எங்களுக்கு இரங்கி, இந்தப் பிரமாணங்கள் எல்லாவற்றையும் எங்கள் இருதயத்தில் பதித்தருள வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.
(அல்லது)
நம்முடைய ஆண்டவர் இயேசுகிறிஸ்து சொன்னதாவது: இஸ்ரவேலே கேள்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும் உன் முழு பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே, இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும், தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கின்றன என்பதே.
ஆண்டவரே, எங்களுக்கு இரங்கி, இந்தப் பிரமாணத்தைக் கைக்கொள்ள எங்கள் இருதயத்தை ஏவியருளும். ஆமென்.
(பின் குரு சொல்வது)
சகோதர, சகோதரிகளே! நாம் இப்பொழுது கடவுளுடைய மகா பரிசுத்த வசனத்தைக் கேட்கவும், ஆண்டவரு
டைய சரீரத்தையும், இரத்தத்தையும் பெற்றுக்கொள்ளவு இங்கே கூடி வந்திருக்கிறோம்.உத்தம மனஸ்தாபத்தோடும், விசுவாசத்தோடும் அவரிடத்தில் கிட்டிச் சேருவதற்காகக் கடவுளுடைய கிருபையைத் தேடி முழங்காற்படியிட்டு, அமைதியாக நம்மை நாமே சோதித்து அறிவோமாக.
We deliver orders within 2-4 hours. In case of rain, there may be a slight delay in delivery. Orders placed after 6 PM will be delivered the next day. Please verify the items upon delivery. We do not offer refunds or replacements for grocery items.