Loading..
எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும், கர்த்தாவே!
எல்லாப் பேராயர்களும், குருக்களும், உதவிக் குருக்களும் விசேஷமாக ...... என்னும் எங்கள் பிரதமப் பேராயரும் .... என்னும் எங்கள் அத்தியட்சரும் தங்கள் நடக்கையினாலும், போதகத்தினாலும், சத்தியமும் ஜீவனுமுள்ள உமது வசனத்தைப் பிரசித்திப்படுத்தி, உமது பரிசுத்த சாக்கிரமெந்துகளை, ஒழுங்காயும் செம்மையாயும் கொடுக்க, அவர்கள் அனைவருக்கும், உமது கிருபையை அருளிச்செய்யும்.
எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும், கர்த்தாவே!
சகல தேசத்தாருக்குள்ளும், உமது சுவிசேஷம் பரவும்படி உழைத்துவரும் யாவரையும் வழிநடத்தி, ஆசீர்வதித்து, எல்லாக் கல்வி நிறுவனங்களையும், தொழில் நிறுவனங்களையும், மருத்துவ நிறுவனங்களையும் உமது ஆவியானவரால் பிரகாசிப்பித்தருளும்.
எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும், கர்த்தாவே!
உமது பரம் ஆதரவினாலே நாங்கள் பஞ்சத்தினின்றும், வறுமையினின்றும், காக்கப்பட்டு பூமியின் நற்பலன்களை, அதனதன் காலத்தில், நன்றியறிதலான இருதயத்தோடு அனுபவிக்கும்படி, எங்களுக்குக் கிருபை செய்தருளும்.
எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும், கர்த்தாவே!
உம்முடைய ஜனங்கள் எல்லாரும் சிறப்பாய் இவ்விடத்தில் கூடி வந்திருக்கிற இந்தச் சபையாரும், சாந்த இருதயத்தோடும், தகுந்த வணக்கத்தோடும், உமது பரிசுத்த வசனத்தைக் கேட்டு, உட்கொண்டு தங்கள் வாழ்நாளெல்லாம் பரிசுத்தமும், நீதியும் உள்ளவர்களாய், உமக்கு உத்தம ஊழியஞ்செய்ய, இவர்களுக்கு உமது பரம கிருபையைக் கொடுத்தருளும்.
எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும், கர்த்தாவே!
We deliver orders within 2-4 hours. In case of rain, there may be a slight delay in delivery. Orders placed after 6 PM will be delivered the next day. Please verify the items upon delivery. We do not offer refunds or replacements for grocery items.