Loading..
ஆத்துமாவும் சுத்தமாகி,எப்பொழுதும் நாங்கள் அவருக்குள்ளும், அவர் எங்களுக்குள்ளும் வாசமா யிருப்பதற்கு ஏற்ற விதமாய், அவருடைய சரீரத்தைப் புசித்து, அவருடைய இரத்தத்தைப் பானம் பண்ண எங்களுக்குக் கிருபை செய்தருளும். ஆமென்.
(குரு எழுந்துநின்று அப்பத்தைப் பிட்டுச் சொல்லுவது)
நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாய் இருக்கிறதல்லவா? (I கொரி. 10:16)
(இப்போது போதகரும், பணிவிடையாளர்களும் ஞான அனுமானங்களை உட்கொள்வர். இவ்வேளையில் கீழ்க்கண்ட கீதம் சொல்ல அல்லது பாடப்படலாம்)
உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக் குட்டியே, எங்களுக்கு இரங்கும்.
உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக் குட்டியே, எங்களுக்கு இரங்கும்.
உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக் குட்டியே, உமது சமாதானத்தைத் தாரும்.
(அல்லது வேறு ஒரு கீதம் பாடலாம்)
குரு : கர்த்தருடையவைகள் கர்த்தரின் பிள்ளைகளுக்கே! கர்த்தரின் பந்தி உங்களுக்காய் ஆயத்தமாக்கப் பட்டிருக்கிறது வாருங்கள்! கர்த்தர் உங்களைப் பந்திக்குஅழைக்கிறார்.
(சபையார் இப்பொழுது நற்கருணை பெறுவார்கள்)
(நற்கருணை கொடுக்கும்போது சொல்லவேண்டிய வார்த்தைகளாவன)
ஜீவ அப்பமாகிய நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சரீரம்.
மெய்யான திராட்சையாகிய நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம்.
(எல்லோரும் பங்கு பெற்றபின் சபையார் முழங்காலில் நிற்க குரு சொல்லுவது)
கிறிஸ்துவின் சரீரமும், இரத்தமுமாகிய சாக்கிரமெந்தை விசுவாசத்தினால் பெற்றுக்கொண்டவர்களாகிய நாம் அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்துவோமாக.
We deliver orders within 2-4 hours. In case of rain, there may be a slight delay in delivery. Orders placed after 6 PM will be delivered the next day. Please verify the items upon delivery. We do not offer refunds or replacements for grocery items.