Loading..
நாங்கள் அவயவங்களாய் இணைக்கப்பட்டிருக்கிறதையும், அவருடைய அருமையான பாடுகளினாலும், மரணத்தினாலும் உண்டான புண்ணியத்தினாவே உமது நித்திய ராஜ்யத்துக்கு நாங்கள் சுதந்தரராயிருக்கிறதையும், இந்த நற்கருணையினாலே எங்களுக்கு நிச்சயப்படுத்தினதற்காக, முழு இருதயத்தோடே உமக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறோம். பரம பிதாவே நாங்கள் இந்தப் பரிசுத்த ஐக்கியத்தில் நிலைத்திருந்து, நாங்கள் செய்யும்படி தேவரீர் நியமித்திருக்கிற நற்கிரியைகள் எல்லாவற்றையும் நிறைவேற்ற, உமது கிருபையைத் தந்தருள வேண்டுமென்று மன்றாடுகிறோம். சரீரமும் ஆத்துமாவுமாகிய எங்களை, முழுவதும் தேவரீருக்குப் புத்தியும், பரிசுத்தமும், ஜீவனுமுள்ள பலியாக எங்கள் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் ஒப்புக் கொடுக்கிறோம். அவருக்கும், தேவரீருக்கும், பரிசுத்த ஆவிக்கும், சகல கனமும் மகிமையும் என்றென்றைக்கும் உண்டாவதாக. ஆமென்.
எங்கள் தேவனுக்குத் துதியும், மகிமையும், ஞானமும், ஸ்தோத்திரமும், கனமும், வல்லமையும், பெலனும், சதாகாலங்களிலும் உண்டாவதாக. ஆமென்.
தேவன் தந்த ஈவுக்காக
என்றென்றைக்கும் ஸ்தோத்திரம்!
விண்ணோர், மண்ணோர் கூட்டமாகப்
பாடுவார் சங்கீர்த்தனம்,
மீட்கப்பட்ட யாவராலும் ஏக தேவரீருக்கே
ஆரவாரமாய் என்றைக்கும்
ஸ்தோத்திரம் உண்டாகவே!
(குரு ஆசீர்வாதம் கூறுவார்)
எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் உங்களோடே இருந்து, நீங்கள் கடவுளையும், அவருடைய குமாரனாகிய நம்முடைய நாதர் இயேசுகிறிஸ்துவையும் பற்றிய அறிவிலும், அன்பிலும் நிலைத்திருக்கும்படி, உங்கள் இருதயத்தையும் சிந்தையையும் காக்கக்கடவது. பிதா, குமாரன், பரிசுத்த ஆவியருமாகிய சர்வ வல்லமை பொருந்திய கடவுளுடைய ஆசீர்வாதம் உங்களுக்குள்ளே இருந்து, எப்பொழுதும் உங்களோடே நிலைத்திருக்கக்கடவது. ஆமென்.
We deliver orders within 2-4 hours. In case of rain, there may be a slight delay in delivery. Orders placed after 6 PM will be delivered the next day. Please verify the items upon delivery. We do not offer refunds or replacements for grocery items.